Friday 6 October 2017

சத்தமா சொல்லிராதீங்க

கண்ணுல ரத்தம் வந்துச்சுன்னு ரொம்பப் பேரு சொல்லக் கேட்டுருக்கேன்.  சமீபத்துல அது எனக்கே நடந்துச்சு.  இன்னைய தேதிக்கு தமிழ்நாட்டோட நெலமைய நெனச்சா எல்லாருக்கும் ரத்தம் வருங்கிறது உண்மை;  ஆனா சமீபத்துல இந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ள போயிட்டு எனக்கு ரெண்டு கண்ணுலயும் ரத்தம் வந்துருச்சு.  

இந்த கோயில UNESCO பாதுகாக்கப்பட்ட பழைய பாரம்பரியம் மிக்க சின்னமா அறிவிச்சுருக்கு.  அப்படிப்பட்ட பெருமையுள்ள கோயில புதுப்பிக்கிறேன்னு அங்கங்க இடிச்சு வச்சுருக்காங்க.  இந்த கோயில்கள் பராமரிப்புக்குன்னு ஒரு மூத்த ஸ்தபதி ஒருத்தர - அநேகமா அவரு பேரு கணபதி ஸ்தபதின்னு நெனைக்கிறேன் - இந்த தமிழ்நாடு அரசாங்கமே நியமிச்சுருக்கு.  ஆனா அவரு இந்த இடிச்சு புதிப்பிக்கிறது சம்பந்தமா யாரும் தன்னை ஆலோசிக்கலைன்னும், இப்புடி மனம் போனபடி இடிக்கிறது ஆகம விதிகளுக்கு எதிரானதுன்னும் சொல்லிருக்காரு.  

இதப் பாத்ததும் எனக்குன்னு என்னமோ சில, பல வருஷங்களுக்கு முன்னால ஆப்கானிஸ்தான் நாட்டுல தீவிரவாதிங்க புத்தர் சிலைகளையும், பாரம்பரிய கலைச்சின்னங்களையும் அழிச்சாங்கன்னு படிச்சதுதான் நெனப்புக்கு வந்துச்சு.   அந்த தீவிரவாதிகளாவது அவங்க நம்புறதா சொல்லுற கோட்பாட்டுக்கு உட்பட்டு அத செஞ்சாங்க.  ஆனா இங்க என்ன காரணத்துக்காக இப்பிடி ஒரு வேலைய செஞ்சாங்கன்னு தெரியல.

இப்பம் ரெண்டு நாளைக்கு முன்னால பெய்ஞ்ச மழையில மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ள தண்ணி வந்துருச்சுன்னு படிச்சேன்.  அதுக்கு  கோயிலைச் சுத்தி இருக்குற ரோட்டையெல்லாம் ஒசரமாக்கிட்டதால கோயிலுக்குள்ள தண்ணி வந்துருச்சுன்னு நெறையப் பேரு கருத்து சொல்லிருக்காங்க.  மக்கழே, தயவு செஞ்சு இத சத்தமா சொல்லிராதீங்க.  

அப்புறம் கோயில மேடாக்குறோமுன்னு அதுக்கும் ஒரு டெண்டர விட்டு,  வேலைய ஆரம்பிச்சு  அதுக்கும் கணக்கு வழக்கு பாத்துருவாங்க.


2 comments:

  1. இதுக்கு புது கதையை சொல்லி மஞ்ச சேலை, பச்சை சேலை, விளக்கேத்துறதுன்னு யாரும் ஆரம்பிக்கலியா?

    ReplyDelete
  2. ஆன்மீக வியாபாரிகள் இருக்கும் வரை எதுவும் நடக்கும்

    ReplyDelete