அம்மணக்காரன் ஊருல கோமணம் கட்டுனவன் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க. அப்புடித்தான் இந்த அமைச்சர்கள் எல்லாரும் சேந்து, இந்த மாநிலத்த மொத்தமா அம்மணமாக்கிப் அழகு பாக்குற வேலையில இருக்கும்போது - ஒருத்தன் மட்டும் கோமணம் கட்டுனா பொறுக்குமா?
அப்புடி பொறுக்காமத்தான் ஒலக நாயகன்னா யாருன்னே தெரியாதுன்னாரு ஒருத்தரு; வட்டி கட்டினாயா, வரி கட்டினாயா அப்புடின்னு கேட்டாரு ஒருத்தரு; X-RAY எடுத்துப் பாத்து எலும்பே இல்லன்னாரு இன்னொருத்தரு.
எல்லாத்துக்கும் ஒரே பதிலா, ஊழல் பட்டியல அனுப்புங்கய்யான்னு சொன்ன ஒடனே நடக்குதுய்யா மாய மந்திர வேலையெல்லாம்.
அரசாங்கத்தோட வலை மனையில E-MAIL addressலாம், காணாமப் போகுதாம்; அலைபேசி எண்ணெல்லாம் மறைஞ்சு போகுதாம்; அந்த பயம் இருக்கட்டும்.
நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..............
மடியில் பணம் இருந்தால் வழியில் பயம் இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteமடியிலிருப்பது ஊரை ஏய்த்த பணமாச்சே! அப்ப பயம் ரெண்டு madangaachche!
ReplyDeleteஎன்று விடியும் தமிழ்நாட்டிற்கு
Delete