Friday 21 July 2017

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய

அம்மணக்காரன் ஊருல கோமணம் கட்டுனவன் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க.  அப்புடித்தான் இந்த அமைச்சர்கள் எல்லாரும் சேந்து,  இந்த மாநிலத்த மொத்தமா அம்மணமாக்கிப்  அழகு பாக்குற வேலையில இருக்கும்போது - ஒருத்தன் மட்டும் கோமணம் கட்டுனா பொறுக்குமா?

அப்புடி பொறுக்காமத்தான் ஒலக நாயகன்னா யாருன்னே தெரியாதுன்னாரு ஒருத்தரு;  வட்டி கட்டினாயா, வரி கட்டினாயா அப்புடின்னு கேட்டாரு ஒருத்தரு;   X-RAY எடுத்துப் பாத்து எலும்பே இல்லன்னாரு இன்னொருத்தரு.

எல்லாத்துக்கும் ஒரே பதிலா, ஊழல் பட்டியல அனுப்புங்கய்யான்னு சொன்ன ஒடனே நடக்குதுய்யா மாய மந்திர வேலையெல்லாம்.

அரசாங்கத்தோட வலை மனையில E-MAIL addressலாம், காணாமப் போகுதாம்;  அலைபேசி எண்ணெல்லாம் மறைஞ்சு போகுதாம்;  அந்த பயம் இருக்கட்டும்.

நல்லா கெளப்புராங்கய்யா பீதிய..............




3 comments:

  1. மடியில் பணம் இருந்தால் வழியில் பயம் இருக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  2. மடியிலிருப்பது ஊரை ஏய்த்த பணமாச்சே! அப்ப பயம் ரெண்டு madangaachche!

    ReplyDelete
    Replies
    1. என்று விடியும் தமிழ்நாட்டிற்கு

      Delete