ஊரூரா வெற்றி கூட்டம் போடுறாங்களாம். எதுக்குடான்னு கேட்டா காவேரி விவகாரத்துல ஜெயிச்சுட்டாங்களாம். காவிரி வாரியம் அமைச்சே ஆகணும்னு நீதி மன்றமும் சொல்லிருச்சாம்; மத்திய அரசும் ஒத்துக்கிடுச்சாம். இந்த வெற்றி ஆளுங்கட்சிக்கு மட்டும்தான் சொந்தமாம்; வேற யாரும் பங்கு கேட்கக் கூடாதாம். ஒரு அமைச்சர் பேசிருக்காரு.
இப்ப என்ன ஆயிருச்சுன்னு வெற்றி கூட்டம் போடுறாங்கன்னு புரியல. காவிரி வாரியம் கேட்டது தண்ணி வரணும் அப்புடின்குற நோக்கத்துக்காக. இன்னும் தண்ணி வந்து சேரல; புதுசா அமையப் போற கர்நாடக அரசாங்கம் என்னன்ன கொக்கு மாக்கு பண்ணப் போறாங்கன்னு தெரியல. வந்து சேராத காவிரிக்கு வெற்றி கூட்டம் போடுறாங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பா நூறு நாளு போராட்டம் நடந்தப்பல்லாம் தூங்கிகிட்டு இருந்த அரசாங்கம், இன்னைக்கு திடீருன்னு முழிச்சு எந்திருச்சு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு குடுப்போம் அப்புடின்னு அறிவிச்சுருக்காங்க.
அதாகப்பட்டது மகா ஜனங்களே, ஒரு வேளை அரசாங்கம் உங்க கோரிக்கைய திரும்பி பாக்கணும்னா - நடவடிக்கை எடுப்பாங்கன்னு நான் சத்தியமா சொல்லலை - திரும்பிப் பாக்கணும்னா ஒரு சில ஆயிரம் பேரு சேந்து, குறைந்தபட்சம் நூறு நாளைக்கு போராட்டம் நடத்தி, அது ஒரு துப்பாக்கிச்சூடு நடத்துற அளவுக்குப் போயிருச்சுன்னா கண்டிப்பா உங்களுக்கு ஒரு அறிக்கை ஒருதி மக்களே!