Thursday 13 April 2017

என்னமோ போடா மாதவா

உழுதவன் கணக்குப் பாத்தா கோவணம்  கூட மிஞ்சாது - ன்னு இப்ப நேரடியா பாத்துட்டு இருக்கோம்.  வெறுமனே பாத்துட்டுதான் இருக்கோம்; ஒண்ணும் நம்மளால பண்ண முடியல.   இருக்க எல்லா மாநிலத்துக்காரனும் போராடுற விவசாயிய சந்திச்சு ஆதரவு தெரிவிச்சுருக்குறாங்க - தமிழக அரச தவிர.

நமக்கு முக்கியமா ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மட்டும்தான் இருந்துச்சு.  அது தவிர மூடுன கடைகளுக்குப் பதிலா வேற இடம் தேடி அலைய வேண்டிய வேலையிருக்கு.  கடைய வர விட மாட்டோம்னு போராடுறவங்கள காவல் துறைய ஏவி அறைய வேண்டிய வேலை இருக்கு.  

நம்ம பிரதமருக்கு வாற, போற வெளிநாட்டு தலைவருங்கள பாத்து, போட்டோ எடுத்துக்குற வேலை இருக்கு.  முக்கியமா யானை பாதையை மறிச்சாருன்னும்,  பத்து லட்சம் மரங்கள அழிச்சாருன்னும், பேரு பெத்த ஜக்கிக்கு பத்மவிபூஷன் குடுக்குற விழா இருக்கு.  

கிறுக்குப் பயலுகள யாரு விவசாயம் செய்யச் சொன்னா, அப்புடின்னு மன நிலைதான் இந்த அரசாங்கத்து இருக்குற மாதிரி தெரியுது. மீதேன் கம்பெனிக்கு நெலத்த வித்துட்டு போங்கடாங்குற மனப்பான்மை அப்பட்டமா தெரியுது.  நடக்குற அநியாயத்த  எல்லாம் பாக்குறப்ப, 






என்னமோ   போடா மாதவா ............ எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.