20 வருஷத்துக்கு முன்னால நடந்தது; ஓரளவு செய்தித்தாள் படிக்கிறவன், டிவி நியூஸ் பாக்கிறவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா இந்த விஷயம் தெளிவா தெரிஞ்சுருக்கும். கோத்ரா ரயில் எரிஞ்சதும், இந்த இந்த மாதிரி நடந்தது; இந்த இந்த மாதிரி ஜி யும், அவரு தலைமையிலான ராசாங்கமும் நடந்துச்சுன்னு கண்டிப்பா தெரியும். அதையும் மீறி இப்ப இந்த ஆவணப்படம் எதுக்கு அப்படின்னு எனக்கு தலைய சுத்துச்சா? எனக்கு தலை சுத்துன மாதிரியே ஒன்றிய அரசுக்கும் சுத்துச்சுன்னு அவங்க தடை உத்தரவு பாத்ததும்தான் தெரிஞ்சுது. அதாவது, புதுசா ஒட்டு போடப் போற தலைமுறைக்கு இதை ஓதி விட்டுரணும்னு பிபிசி காரன் முடிவு பண்ணிட்டான். ஜி யை அடுத்த தேர்தல்ல கவுத்தே ஆகணும்னு கங்கணம் கட்டுன மாதிரி, ஹிண்டன்பர்கும் ஒரு பக்கம் பத்த வெக்கிறான். கொஞ்சம் எழுதப் படிக்க தெரிஞ்சு, சிந்திக்கவும் தெரிஞ்சவனுக்கு இது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம்தானய்யா. எதுவும் தெரியாம பட்டன அமுக்குறவன் அப்படின்னு ஒரு கூட்டம் இருக்கு; பண மதிப்பிழப்புல தெருவுல நின்னது, வரிசையில நின்னு செத்தவன், சேத்து வச்ச காசெல்லாம் செல்லாம போனதையெல்லாம் செமிச்சுட்டு, 2019 ல ஒட்டு போட்டவனுக்கு இந்த பிபிசி ஆவணப் படமும், ஹிண்டன்பர்க் அறிக்கையும் எப்படி போய் சேரும்; சேந்தாலும் அவன் சிந்திப்பானா; 2024 ல எந்தப் பக்கம் நிப்பான்னு தெரியலையே. சிந்திக்கிற பய கூட்டமா இருந்தா, அந்த காவி உடை கபடதாரி யோகி திரும்ப வந்திருக்கவே கூடாதே?
இந்த கூட்டத்தைத் தாண்டி இன்னொரு வகையறா இருக்காய்ங்க. அதான் ஆட்டுக்குட்டி என்ன சொன்னாலும் ஆமாம்னு தலையாட்டுறவன். என்னடா தமிழ்நாட்டுல இருக்குற ஆட்டுக்குட்டி மட்டும்தானான்னு கேக்கப்படாது. இது மாதிரி நெறைய ஆட்டுக்குட்டி இந்தியா பூராம் இருக்கு; அந்த ஆட்டுக்குட்டிக்கு அடி வருடவும் ஒரு கூட்டம் தயாரா இருக்கு. அவனுக்கும் செருப்புல அடிச்ச மாதிரி புத்தி சொல்ற மாதிரி இருக்கணும். அது இந்த பிபிசி ஆவணப்படத்துலயும், ஹிண்டன்பர்க் அறிக்கையிலயும் இல்லைன்னுதான் நெனைக்கிறேன்.
அதிர்ச்சியான ஒரு விஷயம் இப்ப தினமணியில படிச்சேன். LIC பணத்தை எடுத்து, மறுபடியும் ஒரு 300 கோடிக்கு அதானி நிறுவனப் பங்குகளை வாங்கப் போறாய்ங்களாம். இந்த கூட்டம் இந்தக் கூத்தடிச்சாலும் யாரும் கேக்க மாட்டாங்கன்னு முடிவே பண்ணிட்டாய்ங்களா?