இப்பந்தாய்யா ரெண்டு நாளைக்கு முன்னால சொன்னேன். இப்ப ஆரம்பமாயிருச்சு. பொதுமக்கள் மத்தியில இருக்குற அதிருப்திய எப்புடிரா மாத்துறதுன்னு ரொம்ப யோசிச்சு அஞ்சு அறிப்பு (அவரு பேசுறத கேக்கும் பொது அந்த அறிவிப்பு அப்புடின்ற வார்த்த என் காதுல அறிப்புன்னுதான் விழுந்துச்சு - இது எனக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமானு நீங்கதான் சொல்லணும்) வெளியிட்டுருக்காரு மாண்புமிகு முதல் மந்திரி.
இந்த அஞ்சுல எனக்கு முக்கியமான சந்தேகம் அஞ்சாவது அறிப்புலதான்.(மொத்தத்துல எல்லாமே சந்தேகத்துக்கு உட்பட்டதுங்குறது வேற விஷயம்) அது என்னன்னா மீனவருங்களுக்கு 5000 வீடு கட்டித்தரப் போறாங்களாம். மொத்த மதிப்பீடு 85 கோடி ரூவாயாம். அப்படின்னா ஒரு வீட்டுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய். இந்த ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூவாயில காண்டிராக்ட் எடுக்குற புண்ணியவான், மேல இருந்து கீழ வரைக்கும் கவனிச்சு முடிச்சப்பறம் எப்படி வீடு கட்டுவான்; இல்ல அப்புடி கட்டுன வீடு என்ன லட்சணத்துல இருக்கும்னு யோசிச்சு பாத்தேன் - உஸ்..... அப்பா இப்பமே கண்ணக் கட்டுதே.
இது போக பிரசவத்துக்கு காசு, வண்டி வாங்க மானியம்னு எல்லாமே கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஒரு அரசாங்கங்கிறது அடிப்படை வசதிய செஞ்சு குடுக்கணுமே தவிர, தனியாருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கக் கூடாது. உதாரணமா அரசாங்க ஆசுபத்திரிய எல்லாரும் பயன்படுத்துற தரத்துக்கு மேம்படுத்திக் குடுக்கணுமே தவிர, நான் பணம் தர்றேன்; நீ தனியார் ஆசுபத்தரிக்கு போன்னு சொல்லக்கூடாது. அது போல public transport வசதிகள (அதாங்க அரசாங்க போக்குவரத்து) ஒழுங்கு பண்ணித் தர்றதுக்கு ஏற்பாடு பண்ணாம, வண்டி வாங்கிக்க மானியம் தாரேன்னு சொல்லுறது எதுக்குன்னா ......... ஒனக்கு மானியம்; எனக்கு கமிஷன் அப்படின்னு இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. (கூவத்தூர் செலவயெல்லாம் எப்படிய்யா திரும்ப எடுக்குறது அப்படின்னு நீங்க கேக்குறது புரியுது)
வறட்சி நிலையில குடிக்கத் தண்ணி இல்ல; விவசாயி செத்துக்கிட்டு இருக்கான்; கர்நாடகா, தண்ணி குடுக்க முடியாதுன்னு சொல்லிருச்சு; ஆந்திராவும், கேரளாவும் தடுப்பணைகள் கட்டிகிட்டே இருக்காங்க; இப்புடி உயிர் போற பிரச்சினைகள் தலைக்கு மேல இருக்கும்போது
நீங்களே முடிவு பண்ணிக்குங்க மக்கழே! இன்னைக்கில்ல, என்னைக்கி வந்தாலும் தேர்தலப்போ என்ன பண்ணனும் அப்புடிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும்.