மூணு வருஷமா ஆட்சியில இருந்தவுங்க, இன்னைக்கு திடீருன்னு ஒரு சங்க எடுத்து ஊதி இருக்காங்க; மாட்ட இறைச்சிக்காக விக்கக் கூடாதுன்னு. இம்புட்டு நாளா இல்லாம இன்னைக்கு என்னய்யா ஞானோதயம் வந்துச்சு இந்துத்துவா கொள்கைய இந்த நாட்டு மக்கள் மேல திணிக்கனும்னு, அப்புடிங்கற யோசனையா இருந்துச்சு. ஆனா, இந்த மந்திரிமாரெல்லாம் இறைச்சி சாப்பிடக் கூடாதுன்னு நாங்க சொல்லவே இல்லையே அப்புடிங்குறாங்க.
இன்னொன்னு யோசிச்சுப் பாத்தா, உலகத்துலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி பண்ணுறதுல நம்ம இந்தியாதான் ரெண்டாவது இடத்துல இருக்குது. உலகத்துக்கெல்லாம் நம்ம ஊருல இருந்து பெரிய பெரிய கார்பரேட் கம்பனிக்காரன் இறைச்சி விக்கிறான்; உள்ளூருல சிறு தொழிலா ஒருத்தன் தானே அறுத்து வித்து லாபம் பாக்குறான். இது எப்படி நியாயம் அப்புடின்னு மோடி அண்ணாச்சி காத கடிச்சு, இப்புடி ஒரு சட்டம் கொண்டாந்துருக்குறாங்க.
மொதல்ல மெதுவா மாடு, ஒட்டகம் அப்புடின்னு ஆரம்பிச்சு, அப்புடியே ஆடு, கோழி எல்லாத்தையும் லிஸ்டுல கொண்டாந்துருவாங்க. அப்புறம் நீ பெரிய கம்பனிக்காரன் கண்ட ரசாயனத்தையும் கலந்து விக்கிற இறைச்சியைத்தான் வாங்கியாகனும்.
சமீபத்துல இந்த ஸ்டேட் பேங்க் ஆப் வட்டிக்கடை ஒரு சட்டம் போட்டது, நம்மளோட பணத்த அக்கௌன்ட்ல வச்சிருக்க நாமளே வட்டி கட்டணும்னு. அந்த வட்டிக் காச எடுத்து, மேல சொன்ன பெரிய கம்பனிக்கு கடன் கொடுப்பாங்க. அந்த முதலாளி கடன வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுன்னு வெளிநாட்டுக்கு ஓடிப் போயிருவான்.
ஆக, இந்த மந்திரிமாரு சொன்ன மாதிரி இறைச்சி சாப்பிடக் கூடாதுன்னு இந்த அரசாங்கம் சொல்லவே இல்ல மக்களே; நீயா அறுத்து நீயா சாப்பிடக் கூடாதுன்னுதான் சொல்லுறாங்க. கார்பரேட் கம்பனிக்காரன் விக்கிறத வாங்கி சாப்பிட்டு, எல்லா வியாதியையும் விலை கொடுத்து வாங்கிக்கோன்னு. இப்பம் புரிஞ்சுதா திட்டம் மக்களே.