Sunday 19 July 2020

அதிசயங்கள் சூழ் உலகு

நம்ம நாடு  ...... அதாங்க இந்திய நாடு பல்வேறு ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிறைந்த நாடு.  மாபெரும் மகான்களும், பெரியோர்களும்  வாழ்ந்த நாடு.  இந்த நாட்டின் மக்கள் நல்வாழ்வு வாழ பல்வேறு காலங்களிலும், பல நூறு பெரியோர்கள் பாடுபட்டிருக்கிறார்கள்;  நல்வழி காட்டியுள்ளார்கள். இக்கட்டான பல சூழ்நிலைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது நம் நாடு.  பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் இதில் அடக்கம் என்பது முக்கியம்.  மொத்தத்தில் பல்வேறு அறிஞர்களின் வழிகாட்டுதலும், பல்லாயிரக்கணக்கானோரின் தியாகமும் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் நல்வாழ்க்கைக்கு அடித்தளமாகும்.  ஆனால், ஒரு கேள்வி இங்கே எழுகிறது.  நம்முடைய  இன்றைய நல்வாழ்வு நம் சந்ததிக்கு கிடைக்குமா;  அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கிறதா;  நம்மை வழி  நடத்துவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம் ஆட்சியாளர்கள் நல்வழியில்தான் நம்மை செலுத்திக்கொண்டிருக்கிறார்களா;  சரியான வழியில் நம் பயணம் போய்க் கொண்டிருப்பதாக செய்தி ஊடகங்களில் கூவிக்கொண்டிருப்பவர்கள் சொல்வது உண்மையா.  நாம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம்.

டாய் என்ன கலாய்க்கிற.  வழக்கமா நீ இப்படித்தான் எழுதுவியா அப்படின்னு நம்ம மனசாட்சி சவுண்டு குடுக்குதுங்க.  அதுனால சுருக்கமா நான் என்ன சொல்ல நெனச்சோனோ  அதை சொல்லிட்டுப் போயிர்றேன்.   அதாங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி "அதியங்கள் சூழ் உலகு"   அதை மட்டும் சொல்றேன் .  அதாகப்பட்டது, நம்ம நாட்டுல பல்வேறு மகான்கள் நிகழ்த்துன  அதிசயங்களுக்கு மேலான அதிசயங்கள் சில காலமா நடக்க ஆரம்பிச்சுருக்கு.
அதுல ஒண்ணு  ரெண்டு அதிசயங்களைப் பத்தி பாப்போம்.  எல்லாத்தையும் பேசணும்னு எனக்கு ஆசைதான்.  ஆனா இந்தப் பதிவு ரொம்ப நீளமா போயிரும்.  அதுனால......

மொதல்ல சில மாசத்துக்கு முன்னால நடந்தது.  இந்த கச்சா எண்ணெய்  அப்பிடிங்குற ஒரு மர்மமான திரவத்தை பத்தினது.  சீன வைரஸ்  - அதாங்க கொரோனா  -  ஆட்டத்த ஆரம்பிச்சதும், இந்த உலகமே  ஊரடங்கு அப்பிடிங்குற போர்வைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்ட காலத்துல கச்சா எண்ணெய்  அடிமாட்டு விலைக்கு விக்க ஆரம்பிச்சது.  அடிமாடுக்கு ஒப்பிடுறது கூட தப்பு;  அதோட இறைச்சிக்கு விலை இருக்கு.  ஆனா, கச்சா எண்ணெய்க்கு விலையே இல்லாமல் போச்சு;  அதுவும் தப்போ, negative price  அப்பிடிங்குற நிலைமைக்கு போயிருச்சு.  அதாவது, எண்ணையை வாங்கிக்கிறவனுக்கு, விக்கிறவன் பணம் குடுக்குற நெலம.  உலகம் பூரா பெட்ரோலும், டீசலும்  விலை பாதாளம் நோக்கி போயிட்டிருந்த நேரத்துலயும், இந்தியாவில மட்டும் விலை தாறுமாறா ஏறுச்சு.  இப்புடி ஒரு அதிசயம் எங்கயாவது நடக்குமா மக்களே.  அதுனாலதான் இது ஒரு அதிசய பூமியா இருக்கு.

இதுக்கு ஒப்பா இப்ப ஒரு அதிசயம் நடந்துருக்கு.  நான் மேல சொன்ன அதிசயம் கூட எல்லாருக்கும் தெரிஞ்சு நடந்த ஒண்ணு .  இப்பம் நடந்துருக்கே அதை நெனச்சாலே தலை சுத்துது.  கொரோனா பரவாம இருக்கணும்னா கை கழுவுறதுக்கு சோப்பு ரொம்ப முக்கியம்;  அது மாதிரிதான் சானிடைசரும்.  அது ரெண்டையும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல  இருந்து நீக்கிட்டாங்க.  அதோட GST - யை 12 சதவீதத்துல இருந்து 18 சதவீதமா கூட்டிட்டாங்க.  என்னா ஒரு அதிசயம்.

உலகத்துல 150 நாடுகளுக்கு, கொரோனாவுக்கு எதிரா போராடுறதுக்கு நம்ம தாய்த் திருநாடு உதவி பண்ணிருக்காம்.  நாமெல்லாம் ரொம்பக் குடுத்து வச்சவங்க.  அதிசயங்கள் சூழ்ந்த உலகத்துல வாழறோமே.  

2 comments:

  1. கட்டுரையில் பேசப்பட்டுள்ள இரண்டு விஷயங்களுமே நம் நாட்டின் 130 கோடி மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் விஷயங்கள்தானனன். இன்னும் பேசுவதற்கும் எதிர்வினை ஆற்றுவதற்கும் நிறையப் பிரச்சனைகள் உள்ளன. கரோனா காலத்தில் திரைமறைவில் பல அநியாயங்கள்,மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அரசியல் வெளி நம்பிக்கை அற்றதாகவும், மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது. அமைதியாகக் கடந்து போகவும் மனமில்லை எதிர்வினையாற்றவும் முடியாமல் நிலைகுத்தி நிற்கிறேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete