Saturday 19 May 2018

கர்நாடகாவுல தோத்தது யாரு..

"ஒரே வேடிக்கையா இருக்கு மாப்ளே; இவனுக்கு மெஜாரிட்டி இல்லைன்னு அவன் சொல்லுறதும்,  இல்லல்ல எங்களுக்கு தான் மெஜாரிட்டி இருக்குன்னு அவன் புளுகுறதும்..ஹே..ஹே .. நல்லா வேடிக்கைதான் போ."

"ஏன் மச்சான், எந்த அடிப்படையில இந்த கவர்னரு அந்த ஆள முதலமைச்சரா பதவி பிரமாணம் செஞ்சு வச்சாரு."

"மாப்ள, இந்த கவர்னரு பதவியே வேலை வெட்டியில்லாத, ரிடயரு ஆகுற பருவத்துல இருக்குற அரசியல்வாதிகளுக்குன்னே ஒதுக்கி வச்சுருக்குற பதவி.  அவங்களும், முன்னால, பின்னால சைரன் வச்ச வண்டியோட அப்படியே பந்தாவா போயி வந்துக்கிட்டு இருப்பாக.  இந்த மாதிரி எலெக்ஷன் அது இதுன்னு நடந்து, இந்த பய புள்ளைகளுக்கு எஜமான விசுவாசத்த காட்ட வேண்டிய நேரம் வரும் போது கண்டிப்பா காமிச்சுருவாங்க.  அப்புடித்தான் இந்த எடியூரப்பா முதலமைச்சரா வந்து உட்காரப் பாத்தாரு.  அது வேலைக்காகல.  கடைசியில ஒரு உருக்கமான உரை வாசிச்சு முடிச்சு ராஜினாமா பண்ணிட்டாரு."

"மச்சான், என் சந்தேகம் என்னன்னா, எப்புடி இருந்தாலும் நாங்கதான் ஜெயிச்சோம்னு ரெண்டு பக்கமும் கோஷம் போடுறாங்களே, அதுல உண்மையிலேயே ஜெயிச்சவங்க யாருன்றதுதான்."

"யோவ்!  மாமனும், மச்சானும் கொஞ்சம் அமைதியா யோசிச்சு பாருங்கையா.  அந்த ரெண்டு பக்கமுமே உண்மையிலேயே ஜெயிச்சவங்கதான்.  ஓட்டுப் போட்ட உன்னையும், என்னையும் மாதிரி இளிச்சவாயன் மட்டும்தான் தோத்துருக்கோம்."

No comments:

Post a Comment