Saturday 18 February 2017

வஞ்சனைகள் செய்தா(வா)ரடி

நடந்தவை அனைத்துக்கும் நாம் அனைவரும் சாட்சி.  இத்தனை கேவலமான நபர்களை தலைவர்களாக ஏற்றுக் கொண்டதும், அவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்ததும் நம்முடைய தவறு.  இதை நாம் அனைவரும் வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  

இந்த தவறுகளுக்கு நம்முடைய பிராயச்சித்தம் என்ன?  சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றிவிட்டால் போதுமா?  நாம் என்ன செய்யப் போகிறோம்?   

தொகுதி திரும்பும் பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை ஒரு பிரபல நடிகர் நம்மிடம் வைத்துள்ளார்.  அது மட்டுமல்ல, எதிர் காலத்தில், அடுத்த தேர்தலில் இதே முகங்கள் வெவ்வேறு  முகமூடிகளுடன், வெவ்வேறு  கோஷங்களுடன், வெவ்வேறு கொள்கை முழக்கங்களுடன் உலா வரப் போகிறார்கள்.  அவர்களுக்கு நம்முடைய பதில் என்னவாய் இருக்க வேண்டும் என்பதை உறுதியாய் முடிவு செய்தல் வேண்டும்.  அந்த  முடிவை நீங்கள் செயல்படுத்த வேண்டிய நேரத்தில்  கண்டிப்பாய் செயல்படுத்த வேண்டும்.  இதை நீங்கள் செய்வீர்களா? செய்வீர்களா?? செய்வீர்களா???

இல்லை கண்ணில் காசைக் காட்டியதும், அனைத்தையும் மறந்துவிடுவீர்களா?

No comments:

Post a Comment