கூவத்தூருல ஒரு விடுதியாம்; அதுக்குள்ள இருக்காங்களாம் எம்.எல்.ஏ. எல்லாரும். அவங்கள விசாரிக்கணும்னு உத்தரவு போட்டுச்சாம் நீதிமன்றம். போனாங்கய்யா காவல் துறை அதிகாரியும், வருவாய்த்துறை அதிகாரியும். அவங்க எல்லாரும் ஒன்னு சொன்னாப்புல (சொல்லிக்குடுத்த மாதிரியே) சுய விருப்பத்தின்பேரிலேயே இருக்குறதா ரெண்டு அதிகாரிகிட்டேயும் சொல்லிட்டாங்க.
அந்த விடுதியில அவங்க தங்கியிருக்கவும், மத்த சாப்பிட கொள்ள - குடிக்க - ஆகுற செலவெல்லாம் யாரு எத்துக்குறாங்க. இல்ல அவங்கவுங்களே பில்லு செட்டில் பண்ணுறாங்களா. அப்புடின்னா அவங்க ஊரைவிட்டு வரும்போதே இதையெல்லாம் எதிர்பாத்து கையில பணம் ஏதும் கொண்டாந்தான்களா. அப்புடின்னா அவ்வளவு பணத்த எந்த பாங்க்ல எடுத்தாங்க, இல்ல அதுக்கு ஏதும் ஆதாரம் இருக்கா. அப்புடில்லாம் இல்ல, வேற யாரும் செலவ எத்துக்குராங்கன்னா, அந்த வேற யாரோ ஒருத்தர் அத்தனை பேருக்கும் நிச்சயமா சொந்தமா இருக்கப் போறதில்ல. அந்த வேற யாரோ இந்த எம்.எல்.ஏ. எல்லார்கிட்டயும் ஏதோ எதிர் பாத்து, லஞ்சமா இந்த செலவெல்லாம் எத்துக்கிறாங்களா. அப்படின்னா எல்லா எம்.எல்.ஏ.வும் மொத்தமா லஞ்சம் வாங்குறாங்கன்னு அப்பட்டமா தெரிஞ்சு போச்சுல்ல. அப்ப அந்த எம்.எல்.ஏ. எல்லாரும் மொத்தமா பதவிய இழந்துருவாங்களா. இத எந்த ஒரு நீதிமன்றத்துலயாவது வழக்கா போட முடியுமா.
ஊரெல்லாம் இருக்குற குண்டர்களையும், ரௌடிகளையும் கைது செய்யுறதா சொல்லுற காவல்துறைக்கு, கூவத்தூருல காவலுக்கு நிக்கிறவங்கள பாத்தா ரௌடியா தெரியலையா. இல்ல கூவத்தூருல கல்லெடுத்துக் குடுத்து அழகு பாக்குறதே காவல்துறைதானா. ஏன்னா ஏற்கனவே மரினாவுல கலவரம் நடந்ததா சொல்லி கல்லெடுத்து அடிச்ச அனுபவம் காவல்துறைக்கு இருக்குல்ல.
கூவத்தூர் விடுதியில ஒரே நேரத்துல எத்தன பேரு தங்குறதுக்கு அனுமதி இருக்கு; இப்போ எத்தன பேரு தங்கியிருக்காங்க. ரெண்டு நாளைக்கு முன்னால்கூட Philippines-ல நிலநடுக்கம்னு படிச்சேன். ஒருவேள சுனாமி வந்துருச்சுன்னா கடலோரத்துல இருக்குற விடுதியில இருந்து எல்லாரையும் எப்படி காப்பாத்துவாங்க.
அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்........
No comments:
Post a Comment