ஒரு மாபெரும் கொள்ளை மீண்டும் அரங்கேறியிருக்கிறது - சட்டப்பூர்வமாக, ஆட்சியாளர்களின் ஆசியுடன்; வியர்வை சிந்தி - அல்லது A/c ரூமில் உட்கார்ந்து மூளையை கசக்கி - சம்பாதித்த பணத்தை உங்கள் பையிலிருந்து உங்கள் அனுமதியுடன் கொள்ளையடித்திருக்கிறார்கள் - உங்கள் அனுமதியுடன். திரைதுறைங்கிறது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை. திரையில் பெயர் வராத எத்தனையோ திறமையாளர்கள், தொழிலாளர்கள் உழைத்து மெருகேற்றி ஒரு தனி மனிதனை நாயகனாக மாற்றுகிறார்கள். அத்தனை பேரின் உழைப்பையும் உறிஞ்சிக் குடித்து, கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு, அந்த நாயகன் தன் திறமைகளை camera முன் காட்டுகிறான். அவனும் குறிப்பிட்ட திறமை, பண்பு இருந்ததால்தான் அந்த உயரத்தை எட்டிப் பிடித்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை சந்தைப்படுத்தும் சாக்கில், பொது மக்களின் சட்டைப்பையை குறி வைக்கும் coporate மனநிலைதான் இங்கே நாம் சாட வேண்டிய ஒன்றாகி விட்டது. குறிப்பிட்ட படம் நிச்சயம் நம்மை மகிழ்விக்கப் போகிறது என்ற உறுதிப்பாடு இல்லாத நிலையில், தாறுமாறாக கட்டணத்தை நிர்ணயிப்பதும், அதை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதும் - ஹும் ... ஜன(பண)நாயகம் வாழ்க.
No comments:
Post a Comment