Friday 17 September 2021

எங்கே என் சினார் வாசம்.

நம்ம வாசிப்பில் எங்கேயோ, எப்போதோ வாசித்த ஒரு கட்டுரையோ அல்லது ஒரு கவிதையோ நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.  நம்முடைய ஒரு சூழ்நிலைக்கு அது அப்படியே பொருந்தும்.  இந்த கவிதையை எழுதியவனும், அதை மொழி பெயர்த்தவனும், அதை எனக்கு அறிமுகம் செய்தவனும் இப்போது எனக்கு அருகாமையில் இல்லை; ஆனாலும் அவன் நெய்த இந்த கவிதை என்னை அசைத்துப் பார்க்கிறது.  

காஷ்மீரத்து இளைஞன் அவன்; தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தை சூழ்ந்த இனிய குடும்பம் அவனது.  காலம் செய்த கோலங்கள் விசித்திரமானவை;  போராளிகளாலும்/தீவிரவாதிகளாலும் அவர்களை ஒடுக்க முயலும் அரசு எந்திரத்தினாலும் அவன் தனது மண்ணை விட்டு நகர்கிறான் - குடும்பத்துடன்.  

காலம் எப்போதும் ஒன்றே போலிருக்காதல்லவா?  அவன் நகர்ந்த மண்ணிலும் அவன் உழைத்துப் பிழைக்க ஓர் உத்தியோகம் கிடைக்கிறது.  ஆனால், அவன் தாய் நோய் வாய்ப்படுகிறாள்.  மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்.  மருந்துச் சீட்டு தரப்படுகிறது,

                "சினார் மர வாசங்கள் நிறைந்த தென்றல் போதும்;
                    சினார் மரப்பூக்கள் நிரம்பிய பாதையில் பயணிக்க வேண்டும்."

கான்க்ரீட் காடுகளுக்குள் சினார் மரங்களை எங்கு தேடுவதென்று தெரியாமல் அந்த மகன் அழுகிறான்.

இப்போது ஒரு கண்ணுக்குத்  தெரியாத ஓர் எதிரியால் என் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன;  என் சினார் 5626 மைல் தொலைவில் இருக்கிறது.  அது இயற்கையாய் உருவானதோ அல்லது செயற்கையாய் உருவாக்கப்பட்டதோ - கொரோனா என்ற நுண்ணுயிரி என்னை....................

No comments:

Post a Comment