Wednesday 31 May 2017

சென்னை மாநகரத்திலே......

எங்கய்யா போனாங்க நம்ம ஐடியா மணி எல்லாரும்.  கடல்ல கொட்டின எண்ணைய வாளி வச்சு கோதினவனும், அணைக்கட்டுல தெர்மகூல் விட்டவனும்.  கூட்டிட்டு வாங்கய்யா சீக்கிரம்.  இந்த சென்னை மாநகரத்திலே ஒரு கட்டிடம் தீப்பிடிச்சு எரியுது ரெண்டு நாளா.  அணைக்கிறதுக்கு ஐடியா வேணும்.  

இன்னமும் விதி முறை மீறின கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாம தடை உத்தரவு குடுக்குற நியாயமாரே, இப்ப இந்த தீய அணைக்கிறதுக்கு ஒரு உத்தரவு சீக்கிரம் குடுங்கைய்யா.

நல்லா வேளை உயிர் சேதம் இல்லாம போச்சு.  இந்த லட்சணத்துல நம்ம மாநிலத்துலதான் அணு உலை வச்சு மின்சாரம் எடுக்குறான்.  அதுவும் இல்லாம மீத்தேன் எடுக்குறேன், ஹைட்ரோ கார்பன் கண்டுபுடிச்சுட்டேன்னு வேற ஆரம்பிக்கிறாங்க.  

எல்லாம் அவன் செயல்.

No comments:

Post a Comment