Saturday 21 January 2017

க...............க..............க.............?

பராசக்தி அப்புடிங்கிற ஒரு பழைய திரைப்படத்துல - சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகத் திரைப்படம் - கா கா கா அப்புடின்னு ஒரு பாட்டு வந்துச்சு.  இந்த க...............க..............க.............? அது இல்லை.   ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால அப்ப இருந்த மத்திய அரசாங்கம் மொழித் திணிப்பு செய்யுறாங்கன்னு சொல்லி, இப்ப நடக்குற மாதிரியே போராட்டாம்லாம், நடந்ததாகவும், ரயில் மறியல் செஞ்சதாகவும், அந்தப் போராட்டங்களின் பலனாக ஆட்சிக்கு வந்ததாகவும் சரித்திரம்லாம் இருக்கு.  அந்த கட்சியின் கொள்கைதான் மேல சொன்ன க...............க..............க.............?

இந்த கொள்கைய உயிர் மூச்சா வச்சிருக்குறதா சொல்லிக்கிற அந்த தலைவர்களும், அவங்களோட வழித் தோன்றல்களும் - இது பிரிஞ்சு போனவங்க, தனிக்கட்சி அமைச்சவங்க எல்லாரும் - இன்னைக்கு தேதியில, காசும், இன்னபிற etc etc ம் கொடுத்து ஆளுங்கள கொண்டு வந்து, பொதுமக்களோட சர்வ சுதந்திரத்தையும் சீர்குலைச்சு போராட்டம்கிற பேருல என்னனவோ பண்ணுற கூத்தையெல்லாம் பார்த்த நமக்கு............,

போராட்ட களத்தை தாங்களே சுத்தம் செஞ்சுக்குறாங்களாம்;  போக்குவரத்த சீர் பண்ணிக்கிறாங்களாம்;  கூட மாட இருக்குறவங்களுக்கு ஒத்தாசையா இருக்காங்களாம்; ரயில மறிச்சுட்டு, உள்ள இருந்த பயணிகளுக்கு சாப்பாடு, தண்ணி குடுத்து பாத்துக்கிட்டாங்களாம்; பொது சொத்துக்கு ஏதும் சேதம் பண்ணலையாம்; முக்கியமா கூட இருக்குற பொண்டு புள்ளைகள பத்துறமா பாத்துக்குறாங்களாம்.

முக்கியமா அவங்க பக்கத்துலையே அரசியல்வியாதிகள அண்ட
விடலையாம்.

போராட்டம்  பண்ணுறது, உரிமைய மீட்டேடுக்குறது எங்க டமை  அப்புடின்னு இறங்குன புள்ளைங்க ண்ணியமா, ட்டுப்பாடோட  நடந்துக்குறதெல்லாம் பாத்தா நம்ம ஊரும் நாடும் நிச்சயமா மத்த எல்லா மக்க மனுசருக்கும் ஒரு முன்னுதாரணம் அப்புடின்னு பெருமையா இருக்கு.

க...............க..............க.............? எங்க கொள்கை, உயிர் மூச்சு அப்புடின்னுல்லாம் சோடா குடிச்சு கத்துறவுங்களுக்கெல்லாம் மேல நின்னுட்டீங்கய்யா/நின்னுட்டீங்கம்மா.

No comments:

Post a Comment